இந்தியா

உத்தரகண்ட் மாநிலத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

DIN

உத்தரகண்ட் மாநிலத்தின் விளம்பரத் தூதராக இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்தை உத்தராகாண்ட் மாநிலத்தின் விளம்பரத் தூதராக நியமித்துள்ளார். 

இது குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது: “ ரிஷப் பந்த்க்கு எனது வாழ்த்துகள். அவர் பல இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து அனைவரையும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவரது கனவுகளை விடா முயற்சியின் மூலம் அடைந்துள்ளார். அவரை மாநிலத்தின் விளம்பரத் தூதராக நியமிப்பது இளைஞர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும்.” என்றார்.

விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ரிஷப் பந்த் கூறியதாவது: “ என்னை உத்தரகண்ட் மாநிலத்தின் விளம்பரத் தூதராக நியமித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு எனது நன்றி. அவர் உத்தரகண்ட் மாநிலத்திற்காக பணியாற்ற எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT