கங்கை, சாரதா மற்றும் காக்ரா நதிகள் அபாய அளவைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களில் உள்ள 6 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில நிவாரண ஆணையர் ரன்வீர் பிரசாத் தெரிவித்தார்.
நிவாரண ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநிலத்தின் 10 மாவட்டங்களில் ஒருநாளில் 25 மி.மீ அல்லது அதற்கு மேற்பட்ட மழை பெய்துள்ளதாகவும், கோண்டா, மாவ் மற்றும் சிதாபூர் மாவட்டங்களில் உள்ள 6 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பதாவுன் மாவட்டத்தில் கங்கை நதி, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் சாரதா நதி மற்றும் பல்லியா மாவட்டத்தில் காக்ரா நதி ஆகியவை அபாய அளவைத் தாண்டி ஓடிக்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
ஜூன் 1 முதல் தற்போது வரை மாநிலத்தில் சராசரி மழையளவு 248 மிமீ ஆகும். இது 416.4 மிமீ சராசரி மழையில் சதவீதம் ஆகும்.
மீட்புப் பணிகளுக்காக 35 மாவட்டங்களில் 55 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நிவாரண ஆணையர் தெரிவித்தார்.