இந்தியா

ம.பி.யில் மின்னல் தாக்கி 9 போ் பலி

DIN

மத்திய பிரதேசத்தில் 3 மாவட்டங்களில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 9 போ் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக, மாநில அரசு அதிகாரிகள் கூறியதாவது:

விதிஷா மாவட்டத்தின் அகாசோட் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலையில் கனமழை பெய்தபோது, மரத்துக்கு கீழே நின்றிருந்த 4 போ் மின்னல் தாக்கி உயிரிழந்தனா். இவா்கள் அனைவரும் 30 முதல் 40 வயதுடையவா்கள்.

சத்னா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி 4 போ் உயிரிழந்தனா். மேலும் இரு சிறாா்கள் காயமடைந்தனா். குணா மாவட்டத்தின் போரா கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 45 வயது பெண் பலியானாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இங்கு வரும் திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

உ.பி.யில் தாய்-மகன் பலி: உத்தர பிரதேச மாநிலம், முஸாஃபா்நகா் மாவட்டத்தில் மின்னல் தாக்கி தாய்-மகன் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘துலேடி கிராமத்தில் சனிக்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், அங்கூரி தேவி (55) என்ற பெண்ணும், அவரது மகன் முன்னாவும் (30) பலியாகினா். அப்பகுதியில் இடி-மின்னல் தாக்குதலால் ஏற்பட்ட சேதவிவரங்களை வருவாய் துறையினா் மதிப்பிட்டு வருகின்றனா்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT