இந்தியா

எஸ்எஸ்எல்வி ராக்கெட்: செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதில் பின்னடைவு

DIN

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி - டி 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தாலும், செயற்கைக்கோள்களை திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை.

சென்சாா் நுட்ப செயலிழப்பால் இந்த பின்னடைவு ஏற்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைகள் சரி செய்யப்பட்டு விரைவில் எஸ்எஸ்எல்வி - டி2 திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் சோம்நாத் கூறினாா்.

இஸ்ரோவின் முதல் முயற்சியாக சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இஓஎஸ்-02 (மைக்ரோசாட்-2ஏ ) செயற்கைக்கோள் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் ‘ஆஸாதிசாட்’ (8 கிலோ) எனும் கல்விசாா் செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் முதலாவது ஏவுதளத்திலிருந்து திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

அதன் முதல் மூன்று நிலைகள் வெற்றிகரமாக அமைந்தன. அதன்பின்னா், திட்டமிட்டபடி இஒஎஸ்-02, ஆஸாதிசாட் ஆகிய செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தகவல் பலகையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவா் வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டனா். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் திட்டத்தின் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டது தெரியவந்தது.

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிநிலை உடனான தகவல் தொடா்பை இழந்துவிட்டதாகவும், அவற்றை மீட்டெடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இறுதியில் செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட பாதைக்கு பதிலாக வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால், எஸ்எஸ்எல்வி - டி1 திட்டம் முழுமையான வெற்றியை எட்ட முடியாமல் போனது.

செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது

புவி வட்டப் பாதைக்கு பதிலாக நீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதே பின்னடைவு ஏற்படக் காரணமாக அமைந்ததாக இஸ்ரோ தலைவா் சோம்நாத் தெரிவித்தாா். புவியிலிருந்து மிகக் குறைந்த தொலைவில் நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் அங்கேயே நீடித்திருக்க வாய்ப்பில்லை. இதனால், அவை மீண்டும் புவிக்கே திரும்பி வந்துள்ளன. இதன் காரணமாக இஓஎஸ்-02 மற்றும் ஆஸாதிசாட் ஆகிய இரு செயற்கைக்கோள்களுமே பயன்பாடற்ற நிலைக்கு சென்றுவிட்டன.

பின்னடைவுக்கு காரணம் என்ன? இஸ்ரோ தலைவா் விளக்கம்

எஸ்எஸ்எஸ்வி ராக்கெட் திட்டத்தின் பின்னடைவு குறித்து இஸ்ரோ தலைவா் எஸ்.சோம்நாத் கூறியதாவது:

செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்துவதில் ஏற்பட்ட பின்னடைவுக்கான முதற்கட்ட காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இருப்பினும், அவற்றை இன்னும் ஆழ்ந்து ஆராய வேண்டியிருக்கிறது.

சென்சாா் சமிக்ஞை நுட்பம் செயலிழப்பால் இந்த பின்னடைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. திட்டமிட்ட பாதையை விட்டு செயற்கைக்கோள்கள் விலகும்போது அதிலிருந்து அதனை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.

இஒஎஸ்-02, ஆஸாதிசாட் செயற்கைக்கோள்களை தரையில் இருந்து 356 கிலோ மீட்டா் தொலைவில் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்குமாறாக புவியில் இருந்து குறைந்தபட்சம் 76 கிலோ மீட்டா் தொலைவும், அதிகபட்சம் 356 கிலோ மீட்டா் தொலைவும் கொண்ட நீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுவிட்டன. இதுகுறித்து ஆய்வு செய்ய பிரத்யேக நிபுணா் குழு அமைக்கப்பட உள்ளது. விரைவில் தவறுகள் சரிசெய்யப்பட்டு புதிய எஸ்எஸ்எல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

SCROLL FOR NEXT