நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நான்கு நாள்களுக்கு முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படவுள்ளதால், சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என எம்.பி.க்கள் அவையில் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
படிக்க | இலவசத் திட்டங்களை எதிர்ப்பவர்கள் துரோகிகள்: கேஜரிவால்
முதலில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மக்களவையும் தேதி குறிப்பிடாமல் முன்கூட்டியே ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
அதன்பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டு இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 33 மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், இன்று மின்சார திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. குடும்பநல பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கான மசோதாவும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும் சர்ச்சைக்குரிய எந்த சட்டமும் நிறைவேற்றாமல் இந்த கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.
படிக்க | நாம் எதிரிகள் அல்ல, போட்டியாளர்கள்: வெங்கையா நாயுடு
ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.