இந்தியா

முன்கூட்டியே முடிந்தது மழைக்கால கூட்டத்தொடர்

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நான்கு நாள்களுக்கு முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படவுள்ளதால், சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என எம்.பி.க்கள் அவையில் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

முதலில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மக்களவையும் தேதி குறிப்பிடாமல் முன்கூட்டியே ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

அதன்பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டு இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 33 மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், இன்று மின்சார திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. குடும்பநல பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கான மசோதாவும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும் சர்ச்சைக்குரிய எந்த சட்டமும் நிறைவேற்றாமல் இந்த கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT