இந்தியா

நாந்தேட் செல்கிறார் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

DIN

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நாந்தேட் மாவட்டத்திற்கு திங்களன்று வருகை தரவுள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக சிவசேனாவின் நாந்தேட் மாவட்டத் தலைவர் உமேஷ் முண்டே மற்றும் பல தலைவர்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து ஷிண்டே இந்த பயணம் மேற்கொள்கிறார். 

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முண்டே உள்ளிட்டோரை ஞாயிற்றுக்கிழமை பதவி நீக்கம் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஷிண்டே ஞாயிறன்று தலைநகர் சென்றிருந்தார். 

கடந்த ஜூனில் ஷிண்டே மற்றும் பல சிவசேனா தலைவர்கள் கட்சித் தலைமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். இதைத் தொடர்ந்து, ஜூன் 30-ம் தேதி சிவசேனாவுக்கு எதிரான கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார். சில நாள்களுக்குப் பிறகு, உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

மகாராஷ்டிர அரசியல் நெருக்கடியில் உள்ள சில பிரச்னைகளை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது குறித்து ஆகஸ்ட் 8ஆம் தேதி முடிவு செய்யலாம் என்று ஆகஸ்ட் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வெளிமாநில தொழிலாளா்களுக்கு விடுப்பு வழங்காவிட்டால் புகாா் அளிக்கலாம்

பி.ஏ.சி. ராமசாமி ராஜா 130-ஆவது பிறந்தநாள் விழா

இளைஞா் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் சிறை

அரசுப் பேருந்தில் நடத்துனா் பலி

ஊராட்சிக்கு மின்கல வாகனம் வழங்கல்

SCROLL FOR NEXT