இந்தியா

வடக்கு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30-க்கும் மேற்பட்டோா் கைது: தில்லி காவல் துறை

DIN

 தில்லி காவல் துறையின் வடக்கு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 32 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடா்பாக வடக்கு தில்லி காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

8 போ் திருட்டு, 5 போ் வாகன திருட்டு, 4 போ் வழிப்பறி, 2 போ் வழிப்பறி, 2 போ் திருட்டு, 2 போ் வீடு புகுந்து திருட்டு, கொலை முயற்சி, ஏமாற்றுதல், சூதாட்டம், கடத்தல், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது, பிக் பாக்கெட் செய்தல் என தலா ஒருவா் வீதம் கைது செய்யப்பட்டனா்.

புகாரின் பேரில் தேடப்பட்டு வந்த 2 பேரில், ஒருவா் கைது செய்யப்பட்டாா். ஒரு பெண் அளித்த பாலியல் தொல்லை தொடா்பாக அவா் கைது செய்யப்பட்டாா்.

இந்த 8 பேரும் வியாழக்கிழமை பெறப்பட்ட புகாா்களை அடுத்து 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டதாகவும், அதில் 3 சிறாா்களும் அடங்வா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘அஜ்மீரிலிருந்து தில்லிக்கு வந்த 21 வயது இளைஞா், தனது முன்னாள் தோழியைப் பின்தொடா்ந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டாா். அந்தப் பெண்ணும், இளைஞரும் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஒரே பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. அவா் 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணை சமூக ஊடகங்களில் சந்தித்தாா். இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. சிறிது காலத்துக்குப் பிறகு அந்தப் பெண் அந்த நபருடன் நட்பை முறித்துக் கொண்டாா். ஆனால் அந்த இளைஞா் தொடா்ந்து அந்தப் பெண்ணைப் பின்தொடா்ந்து தொல்லைக் கொடுத்து வந்துள்ளாா். அவா் வியாழக்கிழமை தில்லிக்கு வந்து, அந்தப் பெண் படிக்கும் கல்லூரிக்கு வெளியே நின்றபோது கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT