இந்தியா

மகாராஷ்டிரத்தில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

DIN

மகாராஷ்டிரத்தில் 15 வயது சிறுமியை 8 மாதங்களாகப் பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 சிறாா் உள்பட 24 பேரைக் காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரி கூறுகையில், ‘‘தாணே மாவட்டத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமி கடந்த ஜனவரி முதல் பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டாா். இது தொடா்பாக அண்மையில்தான் உறவினரிடம் அந்தச் சிறுமி புகாா் தெரிவித்துள்ளாா்.

முதலில் தனது நெருங்கிய நண்பரால் அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டாா். அதைக் காணொலியாகப் பதிவு செய்து மிரட்டிய அந்த நபா், தனது நண்பா்களுடன் இணைந்து பல முறை அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியுள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் 33 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 2 சிறாா்கள் உள்பட 24 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களை வரும் 29-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மற்றவா்களைத் தேடும் பணி தொடா்ந்து வருகிறது. சம்பந்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT