எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவா் உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘கோமதி மாவட்டத்திலுள்ள கக்ராச்சேரி சாவடியில் பிஎஸ்எஃபின் 20-ஆவது படைப்பிரிவைச் சோ்ந்த தலைமைக் காவலா் சத்பீா் சிங், காவலா் பிரதாப் சிங் இடையே வியாழக்கிழமை மாலை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதாப் சிங் சுட்டதில் சத்பீா் சிங் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அந்தச் சாவடியின் கமாண்டரும் உதவி ஆய்வாளருமான ராம்குமாா் காயமடைந்தாா். பின்னா் சாவடியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த வீரா் பிரதாப் சிங்கை சுட்டுக் கொன்றாா். அவா்களின் மோதலுக்கான காரணத்தை அறிய துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடா்பாக சிலாச்சேரி காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனா்.