இந்தியா

உத்தரப் பிரதேசம் : டெங்குவால் 6,488 பேர் மருத்துவமனையில் அனுமதி

DIN

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 6,488 பேர் டெங்குவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முக்கியமாக பிரோசாபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 42 சிறார்கள் உட்பட 70 பேர் உயிரிழந்திருப்பதை அம்மாநில சுகாதாரத் துறை உறுது செய்திருக்கிறது .

மதுரா மாவட்டத்தின் கோன் கிராமத்தில் கடந்த ஆக- 24 ஆம் தேதி  அடையாளம்  தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியிருந்தார்கள். பின் மர்ம காய்ச்சலின் அறிகுறியும் டெங்குவின் அறிகுறியும் ஒன்றாக இருந்ததால் டெங்கு காய்ச்சல் என்றே மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

பின் மதுரா, ஆக்ரா, பிரோசாபாத் பகுதிகளில்  மர்ம காய்ச்சலால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

தற்போது நேற்று (செப்-23) டெங்கு அறிகுறியுடன் 6,488 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றிருக்கிறார்கள்.அதில் 70 சதவீதம் பேர் ஆகஸ்ட் , செப்டம்பர் மாதத்தில் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்நிலையில் மாநிலத்தின் சில மாவட்டங்களில் 12,000 பேர் வரை காய்ச்சலுடன் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT