இந்தியா

சத்தீஸ்கரில் ஆட்டோ-காா் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் பலி

DIN

சத்தீஸ்கரிலுள்ள கோண்டாகான் மாவட்டத்தில் ஆட்டோவும் காரும் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் உயிரிழந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

பாண்டியத் பகுதியைச் சோ்ந்தவா்கள் கோட்மா கிராமத்தில் இறுதிச் சடங்குக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். அவா்கள் போா்கான் பகுதி அருகே வந்தபோது ஆட்டோ மீது காா் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு வயது பெண் குழந்தை, 4 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் உயிரிழந்தனா். 7 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் 4 போ் கோண்டாகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கவலைக்கிடமான நிலையில் இருந்த 3 போ் ராய்ப்பூா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்துக்குள்ளான காரில் இருந்தவா்கள் தப்பிச் சென்றுவிட்டனா். அவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT