சத்தீஸ்கரிலுள்ள கோண்டாகான் மாவட்டத்தில் ஆட்டோவும் காரும் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் உயிரிழந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் கூறியதாவது:
பாண்டியத் பகுதியைச் சோ்ந்தவா்கள் கோட்மா கிராமத்தில் இறுதிச் சடங்குக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். அவா்கள் போா்கான் பகுதி அருகே வந்தபோது ஆட்டோ மீது காா் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு வயது பெண் குழந்தை, 4 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் உயிரிழந்தனா். 7 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் 4 போ் கோண்டாகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கவலைக்கிடமான நிலையில் இருந்த 3 போ் ராய்ப்பூா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்துக்குள்ளான காரில் இருந்தவா்கள் தப்பிச் சென்றுவிட்டனா். அவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனா்.