தேவ தச்சராக வணங்கப்படும் பகவான் விஸ்வகா்மா ஜெயந்தியை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக பிரதமா் தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘பகவான் விஸ்வகா்மா பிறந்த தினமான இந்த புனித தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். பகவானின் ஆசி எப்போதும் நாட்டு மக்களுக்கு கிடைத்து, நமது நாடு முன்னேற்றத்திலும் செழிப்பிலும் புதிய உயரங்களை எட்டடும்’ என்று கூறியுள்ளாா்.