இந்தியா

ராஜ் குந்த்ராவின் பணி விவரம் தெரியாது: நடிகை ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்

DIN

‘எனது பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால், கணவா் ராஜ்குந்த்ரா செய்து வரும் பணியின் விவரம் தெரியாமல் போய்விட்டது’ என்று மும்பை போலீஸாரிடம் நடிகை ஷில்பா ஷெட்டி வாக்குமூலம் அளித்துள்ளாா்.

ஆபாச படக் காட்சிகளைத் தயாரித்து செயலிகளில் வெளியிட்டு வந்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவா் ராஜ்குந்த்ரா கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து நடிகை ஷில்பா ஷெட்டியிடம் நடத்திய விசாரணை விவரங்களை துணைக் குற்றப்பத்திரிகையாக மும்பை போலீஸாா் நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தனா்.

அதில், ‘ஆபாச திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட ராஜ்குந்த்ரா நடத்தி வந்த பாலிவுட் ஃபேம், ஹாட் ஷாட்ஸ் செயலிகள் குறித்து எதுவும் தெரியாது. எனது பணியில் மும்முரமாக இருந்துவிட்டதால், ராஜ்குந்த்ரா செய்து வரும் பணியின் விவரம் தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

மற்றொரு நடிகை ஷொ்லி சோப்ரா, ‘எந்தவித தயக்கமுமின்றி ஹாட்ஷாட் செயலிக்கு பணியாற்ற வேண்டும் என்று ராஜ்குந்த்ரா கேட்டுக் கொண்டாா். ஆனால் நான் மறுத்துவிட்டேன்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளாா்.

இதேபோல் மற்றொரு சாட்சியான ஷிஜல் ஷா, ‘கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின்போது ஹாட்ஷாட் செயலிக்காக மூன்று திரைப்படங்களில் நடித்தேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

கேரள மீனவர்களை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

தூத்துக்குடி பெண் தூய்மைப் பணியாளர் வெட்டிக் கொலை

காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் - புதுதில்லி முதலிடம்

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT