மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,586 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,586 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 65,15,111ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 67 பேர் பலியானார்கள்.
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,38,389ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 48,451 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 4,410 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 63,24,720ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 5,67,09,128 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.