தந்தை பெரியாரின் 143ஆம் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | தில்லியில் 57 ஆண்டுகள் இல்லாத மழைப்பொழிவு பதிவு
தமிழகத்தின் சமூக சீர்திருத்த முன்னோடியான தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தை பெரியாரின் பிறந்த நாளை பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சுட்டுரைப் பதிவில், “சுதந்திரம், துணிவு, சமத்துவம்” எனக் குறிப்பிட்டு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.