இந்தியாவில் இதுவரை 77.17 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 57,11,488 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 77,17,36,406 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 31,17,09,349 இரண்டாம் தவணை - 5,04,60,225 |
45 - 59 வயது | முதல் தவணை - 14,68,80,596 இரண்டாம் தவணை - 6,55,94,624 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,48,16,673 இரண்டாம் தவணை - 5,06,61,374 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,66,083 இரண்டாம் தவணை - 86,53,733 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,40,933 இரண்டாம் தவணை - 1,42,52,816 |
மொத்தம் | 77,17,36,406 |