இந்தியா

கரோனாவுக்கு எதிராக 130 நாள்கள் போராட்டம்; பெருந்தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நபர்

DIN

உத்தரப் பிரதேசம் மீரட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் 130 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளதாக நுடெமா மருத்துவமனை மருத்துவர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, விஸ்வாஸ் சைனிக்கு கரோனா இருப்பது உறுதியானது. 

இதுகுறித்து மருத்துவர் அவ்னீத் ராணா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "அவருக்கு கரோனா இருப்பது ஏப்ரல் 28ஆம் தேதி உறுதியானது. தொடக்கத்தில், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அவருடைய ஆக்ஸிஜன் நிலை 16ஆக இருந்ததால், செயற்கை சுவாச கருவி வழியே அவருக்கு ஒரு மாதம் வரை சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சைனிக்கு மன உறுதி இருந்தது. எனவேதான், அவரால் நோயுக்கு எதிராக 130 நாள்கள் போராட முடிந்தது" என்றார்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சைனி, "நீண்ட நாள்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்பிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மருத்துவமனையில் என்னுடன் இருந்த நோயாளிகள் கரோனா காரணமாக உயிரிழக்கும்போது பயமாக இருந்தது. மருத்துவர் எனக்கு ஊக்கமளித்து கரோனாவிலிருந்து மீள வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி கொண்டே இருந்தார்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT