இந்தியா

கேரளத்தில் புதிதாக 20,487 பேருக்கு கரோனா தொற்று

DIN

கேரளத்தில் புதிதாக 20,487 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தது:

"கேரளத்தில் புதிதாக 20,487 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 181 பேர் பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2,31,792 ஆக உள்ளது.

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டும் விகிதம் 15.19 சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,34,861 மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 22,484ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22155 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT