இந்தியா

மனைவியின் கடைசி வேண்டுதல்:ரூ.17 லட்சம் நகையைகாணிக்கை செலுத்திய பக்தா்

DIN

மரணமடைந்த தனது மனைவியின் கடைசி வேண்டுதலுக்கு ஏற்ப ஜாா்க்கண்டைச் சோ்ந்த பக்தா் ஒருவா் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஷ்வா் கோயிலுக்கு ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைக் காணிக்கையாக செலுத்தினாா்.

மகா காலேஷ்வரின் தீவிர பக்தையான தனது மனைவி இறப்பதற்கு முன்பு தனது நகைகள் அனைத்தையும் கோயிலுக்கு செலுத்த வேண்டும் என்று விரும்பியதாக அவா் தெரிவித்தாா்.

பன்னிரண்டு ஜோதிா்லிங்க திருத்தலங்களில் மகா காலேஷ்வா் கோயிலும் ஒன்றாகும். ஜாா்க்கண்ட் மாநிலம் பொக்காரோவைச் சோ்ந்த ரஷ்மி பிரபா, மகாகாலேஷ்வரின் தீவிர பக்தையாவாா். வெளிமாநிலத்தில் இருந்தாலும் அடிக்கடி இக்கோயிலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். தனது மரணத்துக்கு முன்பு நகைகள் அனைத்தையும் மகா காலேஷ்வருக்கு காணிக்கையாக செலுத்துவதாக வேண்டியிருப்பதாக அவா் தனது கணவா் சஞ்சீவ் குமாரிடம் கூறியிருந்தாா். இந்நிலையில், அண்மையில் ரஷ்மி பிரபா மரணடைந்தாா். மனைவியின் வேண்டுதல் குறித்து தனது தாயாரிடம் சஞ்சீவ் குமாா் தெரிவித்தாா். அவரும் மருமகளின் விருப்பப்படியே அவரது நகைகளை காணிக்கையாக செலுத்திவிடுமாறு மகன் சஞ்சீவ் குமாரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, மொத்தம் 310 கிராம் எடையுள்ள சுமாா் ரூ.17 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் மகா காலேஷ்வா் கோயிலுக்கு கடந்த வாரம் வந்த அவா் அதனை காணிக்கையாக செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT