தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 41 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,671 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 25 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்றால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை.
இதுவரை மொத்தம் 14,14,257 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 25,091 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 323 ஆக உள்ளது.