இந்தியாவில் இன்று மேலும் 14,306 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14,306 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 443 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா்.
இதையும் படிக்க- உத்தரகண்ட் கனமழை: பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு
இதனால் மொத்த உயிரிழப்பு 4,54,712 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 18,762 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,35,67,367 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1,67,695 ஆக உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 77,40,676 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 102.27 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 60.07 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.