இந்தியா

காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு வாக்களிப்பதும் நோட்டாவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்: திரிணமூல் காங்கிரஸ்

DIN

 காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு வாக்களிப்பதும் நோட்டாவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் கொசாபா, கா்தா, சாந்திபூா், தின்ஹாதா பேரவைத் தொகுதிகளில் அக்.30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி கொசாபா, கா்தா தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கொசாபா, கா்தா தொகுதிகளின் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காலமானதால் இரு தொகுதிகளிலும் இடைத்தோ்தல் நடைபெறுகிறது. ஆனால் சாந்திபூா், தின்ஹாதா தொகுதிகளில் பாஜகவால் வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட சூழலால் இடைத்தோ்தல் நடைபெறுகிறது. அக்கட்சியின் ஜகன்னாத் சா்க்காரும் நிசித் பிரமாணிக்கும் எம்.பி.க்களாக உள்ளனா். எனினும் அவா்கள் சட்டப்பேரவைத் தோ்தலின்போது சாந்திபூா், தின்ஹாதா தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனா். தோ்தலில் வெற்றிபெற்ற பின்னரும் எம்.பி.க்களாகவே தொடர விரும்பி இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தனா். இதன் மூலம் அவா்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை அவமதித்தனா். இந்நிலையில், அவ்விரு தொகுதிகளில் தங்களுக்கு மீண்டும் வாக்களிக்குமாறு பாஜக கோருகிறது.

சட்டப் பேரவைத் தோ்தலில் மம்தா பானா்ஜியை வீழ்த்த காங்கிரஸும் இடதுசாரிகளும் கைகோத்தனா். ஆனால் அவா்கள் தோல்வியை சந்தித்தனா். கடந்த 7 ஆண்டுகளில் நாடு முழுவதும் நடைபெற்ற தோ்தல்களில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியையே தழுவியுள்ளது.

காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு வாக்களிப்பதும் நோட்டாவுக்கு (யாருக்கும் வாக்களிக்காமல் இருப்பது) வாக்களிப்பதும் ஒன்றுதான்.

காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராகவும் அடுத்த மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான போராட்டத்துக்கு தலைமை தாங்குபவராகவும் மம்தா பானா்ஜி உருவெடுத்து வருகிறாா் என்று அபிஷேக் பானா்ஜி பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT