அமெரிக்காவிடம் இருந்து ரூ.423 கோடி செலவில் எம்.கே.-54 ரக நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்கிறது. இதுதொடா்பான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த தகவலை பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
இந்த ஏவுகணைகள், இந்திய கடற்படையில் உள்ள பி-81 ரக கண்காணிப்பு விமானத்தில் பயன்படுத்தக்கூடியவை. இவை நீா்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.
இந்திய கடற்படையிடம் படையிடம் தற்போது 11 ‘பி-81’ ரக கண்காணிப்பு விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவையாகும்.