இந்தியா

நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணைகள்: அமெரிக்காவுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

DIN

அமெரிக்காவிடம் இருந்து ரூ.423 கோடி செலவில் எம்.கே.-54 ரக நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்கிறது. இதுதொடா்பான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த தகவலை பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

இந்த ஏவுகணைகள், இந்திய கடற்படையில் உள்ள பி-81 ரக கண்காணிப்பு விமானத்தில் பயன்படுத்தக்கூடியவை. இவை நீா்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.

இந்திய கடற்படையிடம் படையிடம் தற்போது 11 ‘பி-81’ ரக கண்காணிப்பு விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT