இந்தியா

போதைப் பொருள் விவகாரம்: நடிகர் ஷாருக்‍கான் வீட்டில் போ​லீசார் அதிரடி சோதனை

DIN


மும்பை: மும்பையில் உள்ள நடிகர் ஷாருக் கான் மற்றும் நடிகை அநன்யா பாண்டே  பாண்டே வீடுகளில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

போதைப்பொருள் வழக்கில் கைதாகி மும்பை ஆா்தா் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் ஆா்யன் கானை தந்தையும் நடிகருமான ஷாருக் கான் நேற்று வியாழக்கிழமை காலை நேரில் சந்தித்துப் பேசினாா். சுமாா் 20 நிமிடம் இந்தச் சந்திப்பு நடந்தது.

இந்நிலையில், மும்பையில் உள்ள நடிகர் ஷாருக் கான் வீட்டில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மகன் ஆா்யன் கான் தொடர்பான சில ஆவணங்களை பெறுவதற்காகவே, ஷாருக் கான் வீட்டிற்கு சென்றதாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகை அனன்யா பாண்டே வீட்டுக்கும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 

மும்பை கடல் பகுதியில் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுடன் கேளிக்கை விருந்து நடத்தியதாக ஆா்யன் கான் உள்ளிட்ட 8 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கடந்த 3-ஆம் தேதி கைது செய்தனா். அவா்கள் மும்பை ஆா்தா் சாலை சிறையில் அடைக்கப்பட்டனா்.

மும்பை உயா்நீதிமன்றத்தில் ஆா்யன் கான் சாா்பில் கடந்த 20-ஆம் தேதி மாலை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மும்பை உயா்நீதிமன்றத்தில் வரும் 26-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT