இந்தியா

புதிதாக கேரள மாநில விருதுகள்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

DIN

பத்ம விருதுகளைப் போன்று கேரளத்தில் மூன்று புதிய விருதுகள் நடப்பாண்டு முதல் வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளத்தில் சிறந்த நபர்களுக்கு மத்திய அரசின் பத்ம விருதுகளைப் போல் மாநில அளவில் உயர்ந்த விருதுகள் வழங்க புதன்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கேரள விருதுகள் என அழைக்கப்படும் இந்த விருதுகள்  'கேரள ஜோதி', 'கேரளா பிரபா' மற்றும் 'கேரள ஸ்ரீ' ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் எஅ முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள இந்த விருது கேரள தினமான ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. கேரள ஜோதி விருது ஆண்டுக்கு ஒருவருக்கும், கேரள பிரபா விருது ஆண்டுக்கு இருவருக்கும், கேரள ஸ்ரீ விருது ஆண்டுக்கு ஐந்து பேருக்கும் வழங்கப்படும் எனவும் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை குழுக்கள் பரிந்துரைக்குப் பின் இந்த விருதுகள் வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT