தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 56,293 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. புதிதாக 25 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.04 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 37 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் லேசான நிலநடுக்கம்
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,466 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,14,066 பேர் குணமடைந்துவிட்டனர். பலி எண்ணிக்கை 25,090 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி 310 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 74,744 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 1,97,70,682 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.