இந்தியா

ஜாமீன் மனு: மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் மேல்முறையீடு

DIN


பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட மூன்று பேர் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அவருடன் கைது செய்யப்பட்ட மூவரும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். அவருக்கு ஜாமீன் வழங்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆர்யன் கான் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனுவை புதன்கிழமை தள்ளுபடி செய்தது. 

இந்த நிலையில், ஜாமீன் கோரி ஆர்யன் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT