இந்தியா

கர்நாடகத்தில் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் விளக்கம்

DIN


கர்நாடகத்தில் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது பற்றி அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என முதல்வர் பசவராஜ் பொம்மை திங்கள்கிழமை தெரிவித்தார்.

பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது:

"நிபுணர் குழு ஏற்கெனவே அறிக்கை சமர்பித்து விட்டது. நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம். பள்ளிகள் திறப்பு மற்றும் அதுபற்றிய அனைத்து விவரங்கள் குறித்தும் கல்வித் துறையுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துவார். இதன்பிறகு, 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார் பொம்மை.

கர்நாடகத்தில் கரோனா தொற்று குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 23 முதல் 9-12 வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. 6-8 வகுப்புகளுக்குக் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT