இந்தியா

கேரளத்தில் ஒரேநாளில் 7,555 பேருக்கு கரோனா

DIN

கேரளத்தில் ஒரேநாளில் 7,555 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 73,157 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 7,555 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக திரசூரில் 998 பேரும், எர்ணாகுளத்தில் 975 பேரும், திருவனந்தபுரத்தில் 953 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,45,115 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 74 பேர் பலியானார்கள். 

இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 26,865 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 87,593 சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 10,773 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 47.39 லட்சமாக உயர்ந்துள்ளது. 
பல்வேறு மாவட்டங்களில் 3,11,361 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT