மகாராஷ்டிரத்தில் புதிதாக 1,553 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,553 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 65,89,982 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 26 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,39,760 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | கேரளத்தில் குறையும் கரோனா பாதிப்பு
மேலும் 1,682 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 64,16,998 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 29,627 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் குணமடைவோர் விகிதம் 97.38 சதவிகிதமாகவும், இறப்பு விகிதம் 2.12 சதவிகிதமாகவும் உள்ளது.