அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பசார் பகுதியில் இன்று(அக்-4) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 92கிமீ தொலைவில் 106 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது
இது அம்மாவட்டத்தில் நிகழும் இரண்டாவது நிலநடுக்கம் . முன்னதாக கடந்த அக்-1 ஆம் தேதி நில அதிர்வு ஏற்பட்டிருந்தது.
மேலும் இந்நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ADVERTISEMENT