ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து வெளிநாட்டுப் பயணிகளுக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
- வெளிநாட்டு பயணிகள் 14 நாள்கள் பயண விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். சோதனை இரு நாள்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
- கரோனா பரிசோதனை செய்த பிறகு 'நெகடிவ்' சான்றிதழை இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.
- கரோனா அபாயம் எனப் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- பரிசோதனையில் கரோனா இல்லை என்றால் ஒருவாரம் தனிமையில் இருக்க வேண்டும். பின்னர் மறுபடியும் சோதனை செய்ய வேண்டும். அதில் கரோனா இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மத்திய அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.