இந்தியா

ஆந்திரத்தில் மேலும் 14,429 பேருக்கு கரோனா தொற்று

DIN

ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 14,429 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 14,429 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,57,986 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 103 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,634 ஆக உயர்ந்துள்ளது. 

அங்கு இதுவரை மொத்தம் 14,66,990 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 1,80,362 பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT