இந்தியா

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு எப்போது தடுப்பூசி?

DIN

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு 3 மாதங்களுக்குப் பிறகே கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் 3 மாதங்களுக்குப் பிறகு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

வேறு பாதிப்புக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருவோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஒத்திவைக்க வேண்டும்.

அத்தகைய இக்கட்டான சூழலில் 4 வாரங்கள் முதல் 8 வாரங்கள் வரை தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஒத்திவைக்க வேண்டும். 

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் 14 நாள்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT