கரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஹரியாணாவில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''ஹரியாணாவின் கிராமப் பகுதிகளில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் குழுக்கள் வீடு வீடாக சென்று கரோனா பரிசோதனை செய்து வருகிறது.
பரிசோதனையின் போது பொதுமக்களுக்கு தொற்று உறுதியானால், அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்படுகிறது.
விரைவில் மாநிலத்திலுள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்துமுடிக்கப்படும்'' என்று கூறினார்.