இந்தியா

ஹரியாணாவில் வீடு வீடாக கரோனா பரிசோதனை: சுகாதாரத் துறை

DIN

கரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஹரியாணாவில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''ஹரியாணாவின் கிராமப் பகுதிகளில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

சுகாதாரத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் குழுக்கள் வீடு வீடாக சென்று கரோனா பரிசோதனை செய்து வருகிறது.

பரிசோதனையின் போது பொதுமக்களுக்கு தொற்று உறுதியானால், அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்படுகிறது.

விரைவில் மாநிலத்திலுள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்துமுடிக்கப்படும்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT