மகாராஷ்டிரத்தில் புதிதாக 34,389 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 34,389 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53,78,452ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று 974 பேர் பலியானார்கள்.
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 81,486ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இன்று 59,318 குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 48,26,371ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்பபடி 4,68,109 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
34,91,981 பேர் வீடுகளிலும், 28,398 பேர் நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.