இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 3,11,170 பேருக்கு கரோனா தொற்று; 4,077 பேர் பலி

DIN

புதுதில்லி: நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் கோர தாண்டவத்துக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,11,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் இருந்து ஞாயிற்றுக்ககிழமை சற்று குறைந்திருப்பது சற்று ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கரோனாவால் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இரு தினங்களாக குறையத் தொடங்கியிருக்கிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 3,11,170-ஆகவும், இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 36,18,458 பேராகவும் குறைந்துள்ளது. 

ஒரே நாளில் கரோனா தொற்றால் 4,077  போ் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,70,284-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.46 கோடி (2,46,84,077) ஆகவும் அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,07,95,335-ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் 3,62,437 குணமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 15 -ஆம் தேதி வரை 31,48,50,143 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. சனிக்கிழமை ஒரேநாளில் 18,32,950 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நாடு முழுவதும் இதுவரை 18,22,20,164 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT