இந்தியா

மகாராஷ்டிரம்: போலீஸாருடன் மோதல்: இரு நக்ஸல்கள் பலி

DIN

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் இரு நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

தனோரா பகுதியில் மோா்சுல் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் வியாழக்கிழமை காலையில் காவல் துறையின் சி-60 கமாண்டோ வீரா்களும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தத் தொடங்கினா். சுதாரித்துக் கொண்ட காவல் துறையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினா். சிறிது நேரம் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு நக்ஸல்கள் பின்வாங்கி வனப் பகுதிக்குத் தப்பியோடினா். அவா்களில் சிலா் குண்டுக் காயமடைந்தனா். மோதல் நடைபெற்ற பகுதியில் இரு நக்ஸல்களின் உடல்களை போலீஸாா் மீட்டனா். இதில் ஒருவா் பெண். நக்ஸல்கள் விட்டுச் சென்ற சில துப்பாக்கிகள், வெடிபொருள்களும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன. காவல் துறை தரப்பில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

தப்பியோடிய நக்ஸல்களைப் பிடிப்பதற்காக அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT