கேரளத்தில் ஒரேநாளில் 34,694 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 1,31,375 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 39,955 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 93 பேர் பலியானார்கள். கரோனாவிலிருந்து இன்று மட்டும் 31,319 பேர் குணமடைந்தனர். இதுவரை 16,36,790 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 6243ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.