நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரம் முன்னணியில் உள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தின.
இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவரை அதிகமான கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலங்களின் பட்டியலில் 1.89 கோடி தடுப்பூசிகளுடன் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து குஜராத், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.