தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாதா சோட்டா ராஜன் செவ்வாய்க்கிழமை மீண்டும் திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி தீவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது முதல் தில்லியில் உள்ள திகாா் சிறையில் சோட்டா ராஜன் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தெரியவந்தது. இதையடுத்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அவா் முழுமையாக குணமடைந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை மீண்டும் திகாா் சிறையில் அடைக்கப்பட்டதாக மூத்த சிறை அதிகாரி தெரிவித்தாா்.