மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநிலத்தின் தலைநகரான போபாலில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி மே 17-ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கெனவே ஏப்ரல் 12-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 10-ம் தேதி வரை கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கரோனா பரவல் குறையாததால் மேலும் 7 நாள்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
போபாலில் இதுவரை 1,02,776 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 788 உயிரிழந்துள்ளனர்.