இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு: கடும் துப்பாக்கிச் சூடு

DIN


ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் அருகே கோகர்நாக் பகுதியில், வைலூ என்ற இடத்தில் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் கடும் தாக்கதல் நடத்தி வருகிறார்கள்.

லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், கடும் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருவதாக காஷ்மீர் காவல்துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வைலூ என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அங்குச் சென்ற பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாகவும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT