இந்தியா

புதுச்சேரியில் ஆயிரத்தை நெருங்கும் கரோனா பலி

IANS

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா காரணமாக 12 பெண்கள் உள்பட 23 நோயாளிகள் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 988-ஐ தொட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, 

கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1,266 பேர் தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஒரேநாளில் 1,108 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 14,169 சிகிச்யைல் உள்ளனர். இதில், 12,091 பேர் வீட்டில் தனிமையில் உள்ளனர்.

புதுச்சேரி தலைமையக நிலவரப்படி அதிகபட்சமாக 1,080 பேரும், காரைக்கால் (92), யானம் (79), மாஹே (15) ஆகிய இடங்களில் புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. 

புதுச்சேரி தலைமையகத்தில் அதிகபட்சம் 17 இறப்புகளும், காரைக்கால் 3, மாஹே 2 மற்றும் யானம் 1 இறப்புகளும் பதிவு செய்துள்ளது, இதையடுத்து தினசரி மொத்த இறப்பு எண்ணிக்கையை 23 ஆக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT