அசாமி இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
அசாம் மாநிலம், நாகான் பகுதியில் இன்று காலை 7.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.0 பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அசாம் மாநிலத்தில் அண்மை காலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.