இந்தியா

கேரளத்தில் கரோனாவுக்கு பத்திரிகையாளர் பலி

IANS

கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் உயிரிழந்துள்ளார். 

விபின் சந்த் (42). கடந்த சில நாள்களுக்கு முன்னதாக கரோனா பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார். 
இவர் மனைவி ஸ்ரீதேவி மற்றும் மகன் மகேஸ்வருடன் வசித்து வந்தார். 

அவரது மரணத்தைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை முன்னணி தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. 

விபின் கடந்த 2005ஆம் ஆண்டில் இந்தியா விஷன் மலையாள செய்தி தொலைக்காட்சியில் தனது பணியைத் தொடங்கினார். கடந்த 2012இல் மாத்தரபூழியில்  சேர்ந்தார்.

இவரது உயிரிழப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, மத்திய வெளி விவகார அமைச்சர் மற்றும் பல அரசியல் தலைவர்கள், அனைத்துத்தரப்பு மக்கள் பத்திரிகையாளர் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT