உத்தரகண்ட் மாநிலத்திற்குள் நுழைவோருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைச் சான்று கட்டாயம் என்று அம்மாநில அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
டெஹ்ராடூன், ஹரித்வார், உதம்சிங்நகர் மற்றும் நைனிடால் ஆகிய இடங்களிலிருந்து உத்தரகண்ட் மாநிலத்திற்குள் வருவோர் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைச் சான்று மற்றும் விரைவான ஆன்டிஜென் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
உத்தரகண்ட்டில் மே 18 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள் கடந்த 72 மணி நேரத்திற்குள் எடுத்த ஆர்டிபிசிஆர் எதிர்மறை சான்று வைத்திருக்க வேண்டும். மேலும் ஸ்மார்ட் சிட்டி போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 5,890 பேருக்குப் புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளதாக, மேலும் 180 பேர் பலியாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.