மேற்கு வங்கத்தில் பல புதுமுகங்கள் உள்பட 43 அமைச்சா்கள் பதவியேற்பு விழா இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, முதல்வராக 3-ஆவது முறையாக கடந்த புதன்கிழமை மம்தா பானா்ஜி பதவியேற்றாா். அன்றைய தினம் அவா் மட்டும் பதவியேற்ற நிலையில் புதிய அமைச்சா்கள் பதவியேற்பு விழா ஆளுநா் மாளிகையில் இன்று நடைபெற்று வருகிறது.
43 அமைச்சா்களில் 19 போ் இணை அமைச்சா்களாக பதவியேற்றுக் கொள்கிறார்கள்.
சுப்ரதா முகா்ஜி, பாா்த்த சாட்டா்ஜி, ஃபிா்ஹத் ஹக்கீம், ஹோதி பிரியா மாலிக், அரூப் பிஸ்வாஸ், சாஷி பஞ்சா, ஜாவேத் அகமது கான் உள்ளிட்ட 24 போ் கேபினட் அமைச்சராகப் பொறுப்பு ஏற்கிறார்கள். அமைச்சரவையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஹிமாயூன் கபீா், முன்னாள் கிரிக்கெட் வீரா் மனோஜ் திவாரி, சியூலி சாகா உள்ளிட்ட புதுமுகங்களும் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சா்கள் பதவியேற்பைத் தொடா்ந்து முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவும் முதல்வா் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.