ஜம்மு-காஷ்மீரில் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,228 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 60 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 46,535 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஜம்மு-காஷ்மீரில் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.
நாளையுடன் இந்த ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை தனது சுட்டுரையில், ஜம்மு-காஷ்மீரின் 20 மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சில அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்றவற்றிற்கு கடும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும். மேலும் திருமண நிகழ்விற்கு 25 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.