கேரளத்தில் புதிதாக 35,801 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:
"மாநிலத்தில் புதிதாக 35,801 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
புதிதாக பாதிப்புக்குள்ளானோரில் 316 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 32,627 பேர் தொடர்பிலிருந்ததன்மூலம் பாதிக்கப்புக்குள்ளாகியுள்ளனர். 2,743 பேருக்கு எவ்வாறு தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் 1,23,980 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளோர் விகிதம் 28.88 சதவிகிதமாக உள்ளது. மாநிலத்தில் இதுவரை மொத்தம் 1,70,33,341 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கடந்த நாள்களில் 68 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்த பலி எண்ணிக்கை 5,814 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 29,318 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 14,72,951 பேர் குணமடைந்துள்ளனர்.
4,23,514 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 10,94,055 பேர் கண்காணிப்பில் உள்ளனர்."